வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம்சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். விடங்கரின் பெயர் புவனிவிடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர்மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும்.கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவன், இறைவிஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்றுஅழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தைவிட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர்கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன்கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன்காட்சி அளிக்கிறாள்.
.jpg)
துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில்நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பானசக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகஸ்தியன்பள்ளியில்அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன்திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார்.அகஸ்தியன்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில்சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம்அமைந்திருக்கிறது.
இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக்கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இராமர்தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிப் பூஜித்த விநாயகர்வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்திவிநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின்சந்நிதி கோவிலின் பிரகாரத்தில் மேற்கு திசையில் உள்ளது.இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில்காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும்கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனதுசிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷிஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில்பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர,கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்துமறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும், இரண்டு ஸ்தல விருக்ஷங்களும்உள்ளன. முதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திரதீர்த்தம், விக்கினேசுவர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவைஉள்ளன. மேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்து தான்இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது.வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்கஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன்இருப்பது ஒரு அதிசயம். கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரிபோன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள்பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரேகிழக்கே கடல் உள்ளது. இதை வேததீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்றுஅழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ளகோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால்100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம். ஆடி அமாவாசை, தைஅமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில்கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சன்னதி கடலில் நீராடி, பின்மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாகஎழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவதுமிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. தீர்த்தத்தில் நீராடிதூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப்பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.
தல புராண வரலாறு:
ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்குவேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையைதிருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில்அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்துஇறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்குமுன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள்கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன.அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறியதிட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.
ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும்திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறியதிட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின்முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள்பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர்திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும்செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும்பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சிஇத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில்கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறுதிருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசிபாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார்.மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்ததிருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ளசமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும்கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்லவேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானைவழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர்செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோவில்தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது.தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும்தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப்பிரகாசிக்க ஆரம்பித்தது. சிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்தபயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால்மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்தது. இதன் விபரத்தைதிருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம்திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம்)தெரிவிக்கிறார்.
வேதாரண்யம் கோவில் விளக்கழகு என்பது பழமொழி. வேதாரண்யம்பார்க்கப் போகும் நீங்கள் மாலை நேரத்தில் சென்று அந்தவிளக்கழகையும் தரிசித்து இன்புறுங்கள்.
ஆலயம் செல்ல வழி :
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி. தொலைவில் இருக்கிறது. தஞ்சாவூர்,கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள்செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் அகஸ்தியம்பள்ளி சுமார் 3கி.மி. தொலைவில் உள்ளது. இங்கிருந்து 2 கி.மி. தொலைவில்அகஸ்தியம்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்இருக்கிறது.வேதாரன்யத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் கோடியக்கரைபறவைகள் சரணாலயமும் உள்ளது