>

Sunday, September 15, 2013

வேதாரண்யம் கோவில்




வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம்சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும்விடங்கரின் பெயர் புவனிவிடங்கர்நடனம் ஹம்ச பாத நடனம்இத்தலத்து மூலவர்மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார்.இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும்.கோவிலின் ராஜ கோபுரம் 5 நிலைகளை உடையதுஇறைவன்இறைவிஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.இத்தலத்தில் உள்ள இறைவி யாழினும் இனிய மொழியாள் என்றுஅழைக்கப்படுகிறாள்இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தைவிட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர்கொண்டுள்ளாள்இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன்கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன்காட்சி அளிக்கிறாள்.




























 துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில்நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள்சிறப்பானசக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம்அகஸ்தியன்பள்ளியில்அக்த்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன்திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார்.அகஸ்தியன்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில்சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம்அமைந்திருக்கிறது.
இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக்கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறதுஇராமர்தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிப் பூஜித்த விநாயகர்வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்இந்த வீரஹத்திவிநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார்இவரின்சந்நிதி கோவிலின் பிரகாரத்தில் மேற்கு திசையில் உள்ளது.இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்கோட்டில்காட்சி அளிக்கின்றனமுருகன்துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும்கோவிலில் உள்ளனஇத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனதுசிருஷ்டித் தொழிலை செய்யலானார்விசுவாமித்திர முனிவர் பிரம்மரிஷிஆகவேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில்பூஜித்து நிறைவேற்றிக் கொண்டார்அகத்தியர்விசுவாமித்திரர் தவிர,கௌதமர்வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்துமறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலில் இரண்டு பிரகாரங்களும்இரண்டு ஸ்தல விருக்ஷங்களும்உள்ளனமுதல் பிரகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம்விசுவாமித்திரதீர்த்தம்விக்கினேசுவர தீர்த்தம்சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவைஉள்ளனமேலும் திருக்கோடி தீர்த்தமும் உள்ளதுஇதிலிருந்து தான்இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது.வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக் கரிக்கஆலயத்தின் உள்ளே இருக்கும் கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன்இருப்பது ஒரு அதிசயம்கங்கையமுனைநர்மதைசிந்துகாவேரிபோன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள்பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம்கோவிலின் நேர் எதிரேகிழக்கே கடல் உள்ளதுஇதை வேததீர்த்தம்சந்நிதி தீர்த்தம் என்றுஅழைக்கின்றனர்இதில் அதிகாலை நீராடிபின் ஊருக்குத் தெற்கே உள்ளகோடியக் கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால்100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமமாம்ஆடி அமாவாசைதைஅமாவாசைபுரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில்கோடியக்கரை ஆதிசேதுவேதாரண்ய சன்னதி கடலில் நீராடிபின்மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்துமணமக்களாகஎழுந்தருளியுள்ள இறைவன் இறைவியை இவ்வூரில் வழிபடுவதுமிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகின்றதுதீர்த்தத்தில் நீராடிதூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால்முன்வினைப்பாவங்கள்செய்வினைகள் யாவும் அகன்று விடும் என்பது நம்பிக்கை.
தல புராண வரலாறு:
ரிக் வேதம்யஜுர் வேதம்சாம வேதம்அதர்வன வேதம் ஆகிய நான்குவேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையைதிருமறைக்காடு பெற்றுள்ளதுநான்கு வேதங்களும் மனித உருவில்அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்துஇறைவனை முறைப்படி வழிபட்டு வந்தனகலியுகம் ஆரம்பிப்பதற்குமுன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள்கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன.அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறியதிட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.
ஒருமுறை திருநாவுக்கரசரும்திருஞானசம்பந்தரும்திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர்ஊர் மக்கள் யாவரும் சிறியதிட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும்கோவிலின்முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர்வேதங்கள்பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை பதிகம் பாடி திருநாவுக்கரசர்திறக்கவும்திருஞானசம்பந்தர் பதிகம் பாடி திறந்த கதவை மூடவும்செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடுஅப்பரும் சம்பந்தரும்பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சிஇத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில்கொண்டாடப்படுகிறது.இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறுதிருப்பதிகம் பாடியருளினார்பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசிபாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார்.மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்ததிருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார்மதுரையில் உள்ளசமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும்கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்லவேண்டாம் என்று அறிவுரை கூறினார்அதற்கு சம்பந்தர் சிவபெருமானைவழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர்செய்யாது என்று கூறி கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.
ஒருமுறை பசியுடன் இருந்த எலி ஒன்று திருமறைக்காடு கோவில்தீபத்தில் உள்ள நெய்யைத் தனக்கு ஆகாரமாக உட்கொள்ள வந்தது.தன்னையறியாமல் எலி தன் மூக்கால் அச்சமயம் அணையும்தருவாயிலிருந்த தீபத்தின் திரியை தூண்டிவிட்டதால் தீபம் சுடர் விட்டுப்பிரகாசிக்க ஆரம்பித்ததுசிவன் கோவில் விளக்கு அணையாமல் காத்தபயனின் காரணமாக எலி அடுத்த பிறவியில் சிவபெருமானின் அருளால்மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க நேர்ந்ததுஇதன் விபரத்தைதிருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை சிவஸ்தலம் பதிகத்தில் (4-ம்திருமுறை - "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகம்)தெரிவிக்கிறார்.
வேதாரண்யம் கோவில் விளக்கழகு என்பது பழமொழிவேதாரண்யம்பார்க்கப் போகும் நீங்கள் மாலை நேரத்தில் சென்று அந்தவிளக்கழகையும் தரிசித்து இன்புறுங்கள்.
ஆலயம் செல்ல வழி :
நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மிதொலைவில் இருக்கிறதுதஞ்சாவூர்,கும்பகோணம்மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள்செல்கின்றனஅருகில் உள்ள ரயில் நிலையம் அகஸ்தியம்பள்ளி சுமார் 3கி.மிதொலைவில் உள்ளதுஇங்கிருந்து 2 கி.மிதொலைவில்அகஸ்தியம்பள்ளி என்ற பாடல் பெற்ற ஸ்தலம்இருக்கிறது.வேதாரன்யத்திலிருந்து 10 கீ.மீ தொலைவில் கோடியக்கரைபறவைகள் சரணாலயமும் உள்ளது